தமிழ்நாடு

ஒரு எழுத்துப் பிழை... ஒரு உயிரின் உணர்வு – அப்பாவின் மனநோயான பாசம்!

Admin July 31, 2025 0
ஒரு எழுத்துப் பிழை... ஒரு உயிரின் உணர்வு – அப்பாவின் மனநோயான பாசம்!
ஒரு எழுத்துப் பிழை... ஒரு உயிரின் உணர்வு – அப்பாவின் மனநோயான பாசம்!

எழுதியது யாருனு தெரியலை... படித்ததில் பிடித்தது ........

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.

உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

*தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

 

#சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Tags

Father-and-Son-Story Emotional-Real-Incident Family-Love Unconditional-Support Fatherhood-Tribute Misunderstood-Emotions Tamil-Emotional-Stories Parent-Sacrifice Life-Lessons True-Story-from-Chennai
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கோபத்தில் கொந்தளிக்கும் குனியமுத்தூர் மக்கள் – 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிக்கு முன்னோட்டம்!

#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி!   சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  

திருப்பத்தூர் மக்கள், கமிஷன் ஆட்சி அல்ல – உறுதியான நல்லாட்சியே விருப்பம்!

கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

தமிழ்நாடு

View more
மேற்கு தாம்பரம் ஜூம்ஆ பள்ளிவாசலில் ரமலான் நோன்பு கால அட்டவணை வழங்கிய கழக நிர்வாகிகள்
மேற்கு தாம்பரம் ஜூம்ஆ பள்ளிவாசலில் ரமலான் நோன்பு கால அட்டவணை வழங்கிய கழக நிர்வாகிகள்

இன்று (20-02-2026) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை முன்னிட்டு மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் ரமலான் நோன்பு கால அட்டவணையை கழக நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கிய தருணம்...     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin February 20, 2026 0
E. பாலமுருகன் பார் கவுன்சில் தேர்தல்: ச. இராசேந்திரன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

E. பாலமுருகன் பார் கவுன்சில் தேர்தல்: ச. இராசேந்திரன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

அனைவருக்கும் இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தலைமைத்துவம், ஆட்சித்திறன் & மக்கள் சேவை – மாபெரும் பேச்சுப்போட்டி கிழக்கு தாம்பரத்தில் இன்று!

தலைமைத்துவம், ஆட்சித்திறன் & மக்கள் சேவை – மாபெரும் பேச்சுப்போட்டி கிழக்கு தாம்பரத்தில் இன்று!

அண்ணா வழியில் ஆட்சி – அஇஅதிமுக நல்லாட்சி மீண்டும்! மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!
அண்ணா வழியில் ஆட்சி – அஇஅதிமுக நல்லாட்சி மீண்டும்! மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!

அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் அமைத்து மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! அண்ணா நாமம் வாழ்க!       சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  

Admin February 9, 2026 0
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்பு

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது… மொழியை காக்க உயிர் தந்த தியாகிகளுக்கு தாம்பரத்தில் வீரவணக்கம்!

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது… மொழியை காக்க உயிர் தந்த தியாகிகளுக்கு தாம்பரத்தில் வீரவணக்கம்!

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.